Tuesday, August 5, 2014

உதயகுமாரனை கையாளுதல்

ஒரு கவிஞனை கையாள்வது குறித்து
உங்களுக்கு எந்தப் புரிதலும் இல்லை 
நீங்கள் அவன் பின்னங்கழுத்தில் வைக்கும் 
கத்தியைப் பற்றி அறிந்தே இருக்கிறான் 

உங்களை நோக்கி புன்னகைப்பவனுக்கு
முன்னறிந்திரா வசைச்சொல்லை பரிசளிக்கிறீர்கள்
அவன் புணர்வது பற்றியோ புகைப்பது பற்றியோ 
பெருங்கவலை கொள்கிறீகள் 
அவன் உறவுகளை கொச்சைப் படுத்துவது
குறித்து பெரும் உவகை கொள்கிறீர்கள் 

ஒரு கவிஞனை வசைபாடுவது 
உங்களுக்கு எளிதாக இருக்கிறது 
அவன் மொழியாளுமை குறித்த
தர்க்கத்தில் லயித்திருகிறீர்கள்

உங்களைப் புறக்கணித்து மௌநித்திருப்பவனின் 
மொழிவீச்சின் காத்திரம் குறித்த 
பிரஞையற்று தொடர்ந்து கல்லெறிகிறீர்கள்

No comments:

Post a Comment

Your comment goes here...