Wednesday, April 27, 2011

திருவையாறு அசோகாவும் வீர‌ ராஜ‌ சேக‌ர‌னும்!

திருவையாறில் க‌ர்நாட‌க‌ ச‌ங்கீத‌த்தைப் போல‌வே அசோகாவும் பிரசித்தம் என்ப‌து அங்கிருப்ப‌வ‌ர்க‌ளுக்கும் ச‌ங்கீத‌ சீசனில் வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கும் தெரியும். ம‌ற்ற‌வ‌ர்க‌ள் திருநெல்வேலியை சிலாகிப்ப‌தோடு ச‌ரி. நான் திருவையாறில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்திருந்தாலும் அந்த‌ அசோகா மீது அவ்வ‌ள‌வாக‌ மோக‌ம் இருந்த‌தில்லை.

நிற்க‌.

ந‌ண்ப‌ர் வீர‌ ராஜ‌ சேக‌ர‌ன் (இனி வீரா) என்னோடு க‌ல்லூரியில் ப‌டித்த‌வ‌ர். தஞ்சாவூரை சேர்ந்த‌வ‌ர் என்ப‌தால் திருவையாற்றை பற்றியும் அசோகாவைப்  பற்றியும்  ஒருவாறு அறிந்து வைத்திருந்தார்.

நான் திருவையாறு என்ப‌து தெரிந்த‌தும் பிடித்துக் கொண்டு விட்டார்.

நானும் சாக்கு போக்கு சொல்லி ஒரு நாள் வ‌ச‌மாக‌ சிக்கிக் கொண்டு விட்டேன். அசோகா வாங்கி வ‌ருவ‌தாக‌ சூட‌ம் ஏற்றி ச‌த்தியம் செய்த‌ பிற‌கு, நில‌க்க‌ட‌லையும் சேர்ந்து கொண்டு விட்ட‌து. திருவையாறில் நில‌க்க‌ட‌லை பிரசித்தம் என்ப‌து இன்று வ‌ரை அங்கு வ‌சிப்ப‌வ‌ர்க‌ள் யாருக்குமே தெரியாது. ஆனால் வீரா பெரிய‌ உருவிலான‌ நில‌க்க‌ட‌லை கிடைத்தே தீரும் என்று தீவிர‌மாக‌ ந‌ம்பினார்.

இது இவ்வாறு இருக்கையில், ஒரு முறை திருவையாறு சென்று விட்டு பெங்களூருக்கு திரும்புகையில் வீராவுக்கு செய்த‌ ச‌த்திய‌ம் நினைவில் வ‌ந்து தொலைத்த‌து. நேரே ஆண்டவருக்கு சென்று அசோகா பாக்கெட்டுக‌ள் வாங்கி திரும்பும் போது நில‌க்க‌ட‌லை ஞாப‌க‌ம் வ‌ந்த‌து. அதை ம‌ட்டும் த‌ஞ்சாவூர் ப‌ஸ் ஸ்டாண்டில் வாங்கி விட‌லாம் என்று நினைத்த‌ போது அது வீராவுக்கு செய்யும் துரோக‌மாக‌ தெரிந்து பிற‌கு வாங்கிக் கொள்ள‌லாம் என்று அந்த‌ முடிவைக் கை விட்டேன்.

ம‌று நாள், அலுவ‌ல‌க‌ம். வீரா வ‌ர‌வே இல்லை.

அடுத்த‌ நாள், வீட்டிலுருந்த‌ ப‌டியே வேலை செய்வ‌தாக‌ த‌க‌வ‌ல்.

மூன்றாவ‌து நாள் (இத‌ற்கிடையே ஒரு பாக்கெட் காலி), வ‌ர‌வே இல்லை.

அன்று இர‌வு என‌க்கு 10.30 ம‌ணி வ‌ரை என‌க்கு Meeting. ப‌சி வேறு. அவ்வ‌ள‌வு அசோகாவையும் எப்ப‌டி த‌னியே சாப்பிடுவ‌து என்று நினைத்த‌ போது, ந‌ண்ப‌ர் சிவ‌சுப்ர‌ம‌ணிய‌த்தின் ஞாப‌க‌ம் வ‌ந்த‌து. ஒரு Escalation ல் இருந்த‌வ‌ர் அசோகா என்ற‌துமே உட‌னே வ‌ந்து விட்டார். ம‌ற்றொரு ந‌ண்ப‌ர் அருட் செல்வ‌னையும் அழைத்து வ‌ர‌ சொல்லியிருந்தேன்.

மூவ‌ருமாக‌ சேர்ந்து அசோகாவை காலி செய்த‌ போது வீராவுக்கு செய்த‌ ச‌த்திய‌ம் நினைவுக்கு வ‌ந்த‌து.

யௌவ‌ன‌ம்

அலுவ‌ல‌க‌த்தில் வேலை இல்லாத‌ போதும் Facebook போர‌டிக்கும் போதும் என்ன‌ செய்ய‌லாம் என்று யோசித்த‌ போது க‌ண‌ நேர‌த்தில் சிந்த‌னையில் உதித்த‌து தான் Blog எழுதும் ஞானோத‌ய‌ம்!

எதையாவ‌து கிறுக்கித் த‌ள்ளிவிடுவ‌து என்ற‌ ஆவேச‌த்தில் Blog ஆர‌ம்பித்தாயிற்று. ச‌ரி, என்ன‌ பெய‌ர் வைப்ப‌து? எதை எதையோ யோசித்த‌ போது த‌மிழில் பெய‌ர் வைக்க‌லாம் என்று முடிவெடுத்து (யார் க‌ண்ட‌து எதிர் கால‌த்தில் க‌லைஞ‌ர் இத‌ற்கும் ஏதாவ‌து ச‌லுகை அறிவிக்க‌லாம்!) தேடிய‌போது ஒன்றும் கிடைக்க‌ வில்லை.

க‌டைசியில் முன் தின‌ம் பார்த்த‌ 'கோ' திரைப்ப‌ட‌த்தின் ஒரு பாட‌லில் யௌவ‌ன‌ம் என்ற‌ வார்த்தை வ‌ர‌க் க‌ண்டு, அர்த்த‌ம் என்ன‌வாக‌ இருந்தாலும் ப‌ர‌வாயில்லை அந்த‌ பெய‌ரையே வைத்து விட‌லாம் என்று முடிவெடுத்து விட்டேன்.

பிற‌கு, நெட்டில் தேடிய‌ போது பின் வ‌ருமாறு விள‌க்க‌ம் கிடைத்த‌து.

யௌவனம்

1. இளமை
2. அழகு
3. களிப்பு

விளக்கம்

பால்யம், கௌமாரம், யௌவனம், வார்த்தக்யம் என்பவை
நான்கு தசைகள் (பருவங்கள்) ஆகும்.
அவற்றுள் மூன்றாவது பருவம் யௌவனம் (இளமை) ஆகும்.

பயன்பாடு

1. பருவம் அரும்பும் போது அந்த உணர்வும் அரும்புவதாயிற்றே!
கோமளத்தின் யௌவனம் சற்று முன்னரே தழைக்க ஆரம்பித்துவிட்ட
நிலையில், அவளது பதினோராவது வயதில், அவளது அத்தை மகன் ராஜன்
கட்டுக் குடுமியுடன் மயில்கண் வேட்டி கட்டி, மலையாள முண்டு போர்த்தி
வந்து நிற்பானே, அதை யாரால் மறக்க முடியும்? ( ஆப்பிள் பசி, சாவி)

2. கிழவனுக்குச் சில சமயம் யௌவனம் திரும்பும் என்று நீ கேள்விப்பட்டது
இல்லையா? அதுபோல் மதுராந்தகனுக்கும் இளமை திரும்பியிருக்கிறது.
(பொன்னியின் செல்வன், கல்கி)

3. யௌவனம் காத்தல் செய் (புதிய ஆத்திசூடி, பாரதியார்)

யௌவ‌ன‌ம் ‍ என‌து Blog ஐ இள‌மையாக‌ வைத்திருக்கும் ஒரு முய‌ற்சியே!