Wednesday, July 20, 2011

From charuonline.com - 2

வாசகர் வட்டத்திலிருந்து…
சாரு நிவேதிதா ‍ ஒரு வருடத்திற்கு முன்பு வரை எனக்குப் பரிச்சயமில்லாத பெயர். இன்றோ நான் charuonline.com மற்றும் “சாரு நிவேதிதா வாசகர் வட்டம்” செல்லாமல் எந்த நாளையும் கழிப்பதில்லை. முன்பு ஒரு முறை ஆனந்த விகடனில் சாருவின் “ஏடா கூடப் பேட்டி” படித்தேன். அதுதான் அவரது எழுத்தில் நான் முதலில் படித்தது. பின், அதே ஆனந்த விகடனில் வெளிவந்த “மனம் கொத்திப் பறவை” சாரு என்ற ஜீனியஸை வெகுஜன மக்கள் அறியச் செய்தது. உலக இலக்கியம் மற்றும் இசையை வாசகர்கள் அறியச்செய்த தொடர். Practicing Hedonism, Existentialism, Post Modernism, Surrealism போன்ற சொற்களை வெகுஜன பத்திரிகை வாசகர்களிடம் அறிமுகம் செய்த‌ அற்புதமான ஒரு தொடர் ["கற்றதும் பெற்றதும்" காலத்திற்கு பிறகு ஆனந்த விகடனை நான் தொடர்ந்து வாங்கியது "மனம் கொத்திப் பறவை" வெளிவந்த காலத்தில் தான்]. ”மனம் கொத்திப் பறவை” நிறைந்த பிறகு சாரு எந்த இதழில் எழுதுகிறார் என்ற ஒரு புரிதல் இல்லாத நிலையில் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். ”Dear Mr. Charu Nivedita” என்று எழுதியிருந்தேன் [முன்பு ஒரு முறை சுஜாதாவிற்கு "Hi Sujatha" என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பி அதற்கு அவரிடம் இருந்து பதில் வராததால் நான் அழைத்த முறை தான் தவறு என்று எண்ணியிருந்ததால்]. சாருவிடமிருந்து பதில் வராது என்றே நினைத்திருந்தேன். ஆனால் உடனே பதிலளித்திருந்தார். ”Hi Charu” என்றே அழைக்குமாறு கூறியிருந்தார். இதை நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை. முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு வாசகனை கூட ஒரு நண்பனைப்போல் பாவிக்கும் மனப்பக்குவம் வேறு எந்த தமிழ் எழுத்தாளரிடமும் எதிர் பார்க்க இயலாத ஒன்று. பிறகு, charuonline.com படிக்க ஆரம்பித்த பிறகு தான் தெரிந்தது “மனம் கொத்திப் பறவை” சாரு நிவேதிதா என்ற சமுத்திரத்தின் ஒரு துளி என்று! இந்த இணையதளம் தான் “Zero Degree” என்ற அற்புத சிருஷ்டி யை படிக்கத் தூண்டியது. இப்படி ஒரு Magnum Opus நாவலை தமிழில் கண்டிப்பாக வேறு யாரும் எழுதி விட முடியாது. Auto Fiction ஐயும் Post Modernism ஐயும் வேறு எந்த படைப்பும் இவ்வளவு எளிதில் விளக்கிவிட முடியாது. பிறகு, Facebook மூலமாக “சாரு நிவேதிதா வாசகர் வட்டம்” அறிமுகம் ஆனது. எவ்வளவு துடிப்பான ஒரு பகுதி! சாருவின் மேல் பெருமதிப்பும் சக வாசக வட்ட நண்பர்கள் மேல் அன்பும் கொண்ட எவ்வளவு அருமையான தோழர்கள்! இப்படி ஒரு கொண்டாட்டமான ஒரு வாசகர் வட்டம் வேறு எந்த எழுத்தாளருக்கும் அமைவது என்பது அந்த எழுத்தாளர் அவரது வாசகருக்கு தரும் வாசிப்பு அனுபவத்தைப் பொருத்தது. சாரு நமக்குத் தரும் Wisdom க்கு ஈடாக நாம் அவருக்கு என்ன செய்து விட முடியும்?
கார்த்திக் சேதுமாதவன்
[http://charuonline.com/blog/?p=2266]

Wednesday, June 1, 2011

From charuonline.com - 1


ஸீரோ டிகிரி பற்றி…

”Zero Degree – நான் படித்தமுதல் பின் நவீனத்துவ நாவல். முதல் 50 பக்கங்கள் படித்து ஒன்றுமே புரியவில்லை, மீதமிருக்கும் பக்கங்களை எப்படி படிக்கப் போகிறேன் என்று நினைத்த போது பெரும் மலைப்பு தான் ஏற்பட்டது.
பின் நவீனத்தைப் பற்றி தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடர்ந்தேன். ஒரு கட்டத்தில் அது சாரு வின் வாழ்க்கை தான் என்று அறிந்த போது என்னுள் எழுந்த உணர்ச்சிகளை எவ்வாறு விவரிப்பது? தான் அனுபவித்த வாதை, வலிகளை ஒரு மனிதன் இவ்வளவு வெளிப்படையாக மெலிதான சுய எள்ளலுடன் பொதுப்படையாக முன் வைப்பதற்கு என்ன ஒரு மனம் வேண்டும்…
சாரு அடிக்கடி சொல்வாரே தன ஆன்மாவையே எழுத்தாக தருவதாக…அது எவ்வளவு சத்தியமான வார்த்தை…சாரு ஜெனசிஸ் க்கு எழுதுவதாக வரும் பகுதிகள் எவ்வளவு ஆழமும் உணர்வும் வாய்ந்தவை…இதைப் படிக்கும் யாராலும் கலங்காமல் இருக்க முடியுமா?
முதல் அத்தியாயத்தை படிக்கும் போது ஏற்பட்ட உணர்வுக்கும் கடைசி அத்தியாயத்தை படிக்கும் போது ஏற்பட்ட உணர்வுக்கும் இடையில் என்னுள் ஏற்பட்டது பெரும் ரசனை மாற்றம். கடைசி அத்தியாயத்தை படிக்கும் போது நாவல் இன்னும் நீளக்கூடாதா என்றே தோன்றியது…
இனிமேலும் என்னால் வேறு எழுத்தாளர்களின் எழுத்தை முன் போலவே ரசிக்க முடியுமா என்று தோன்ற வில்லை. சாருவின் பாதிப்பு அத்தகையது…
அடுத்து என்ன படிப்பது? ராசலீலா? தேகம்? அல்லது இன்னொரு முறை Zero Degree?”
கார்த்திக் சேதுமாதவன்
Comments are closed.

Monday, May 16, 2011

From charuonline.com


அன்புள்ள‌ சாரு,

நேற்று பின்னிர‌வில் ஒரு சுவார‌சிய‌மான‌ க‌ன‌வு. சுவார‌சிய‌த்திற்குக் கார‌ண‌மே அதில் நீங்கள் வ‌ந்த‌து தான்! க‌ன‌வில் வரும் கால‌மும் இடமும் எப்பொழுதுமே குழ‌ப்ப‌மான‌வை. என் நினைவு‌ செல்க‌ளில் மீத‌மிருக்கும் க‌ன‌வின் ப‌டிம‌ங்க‌ள் இதோ!

…நான் என் சொந்த‌ ஊரான‌ திருவையாறிலிருந்து, ப‌ணி புரியும் பெங்க‌ளூருக்குச் செல்ல‌ ரயில் நிலைய‌த்தில் நின்று கொண்டிருக்கிறேன் (திருவையாறில் ர‌யில் நிலைய‌ம் இல்லை என்ப‌து வேறு விஷ‌ய‌ம்!)

திருவையாறிலிருந்து ர‌யிலில் த‌ஞ்சை சென்று, அங்கு ஒரு த‌னியார் டிராவ‌ல்ஸில் டிக்கெட் வாங்கி, திருச்சிக்கு பேருந்தில் சென்று, பின் அங்கிருந்து பெங்க‌ளூருக்கு பேருந்தில் செல்ல‌ வேண்டும் என்ற‌ திட்ட‌ம் பின் வ‌ருமாறு மாறிவிடுகிற‌து.

திருவையாறில் ர‌யில் ஏறிய‌வுட‌ன் ந‌ட‌த்துன‌ர் வ‌ருகிறார். 1 ரூ 75 பைசா வாங்கிக் கொண்டு த‌ஞ்சைக்கு டிக்கெட் த‌ருகிறார். இர‌ண்டு நிமிட‌ங்க‌ள் க‌ழித்து இற‌ங்கினால் திருச்சி ர‌யில் நிலைய‌த்தில் இருக்கிறேன்! ர‌யில் நிலைய‌த்தில் இருந்து இர‌ண்டு தெருக்க‌ள் தள்ளி இருக்கும் ட்ராவ‌ல்ஸை அடையும்போது அது திருவையாறில் இருக்கும் என‌து வீடு! வீட்டிற்கு உள்ளே நுழைகையில் உட்புற‌ம் பெங்க‌ளூர் Electronics City இல் இருக்கும் நான் முன்பு குடியிருந்த‌ என் ப‌ழைய‌ அறையாகத் தோற்ற‌ம் அளிக்கிற‌து.

மேலும் ஒரு ஆச்ச‌ரிய‌மாக‌ அங்கு நீங்க‌ள் இருக்கிறீர்க‌ள்!

எனக்குப் பிடித்த‌ பிர‌ப‌ல‌மான‌ எழுத்தாள‌ர் என் வீட்டில் என்னை வ‌ர‌வேற்ப‌தைப் பார்த்த‌ ஆனந்த‌த்தில் அங்கு இருக்கும் ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் உங்க‌ளைப் ப‌ற்றி சொல்கிறேன். ஆனால் அதைப் பற்றி அவர்களிடம் எந்த சலனமும் இல்லை.

பின் உங்க‌ளிட‌ம் சாப்பிட்டீர்களா சாரு என்று கேட்கிறேன். நீங்க‌ள் இல்லை என்று சொல்ல, இருவ‌ரும் இர‌வு உண‌வு உண்ண‌ வெளியில் வ‌ருகிறோம். உட‌னே அந்த‌ இட‌ம் Koramangala வில் இருக்கும் Jyothi Nivas College அருகாமை ஆக‌ மாறி விடுகிற‌து.

இருவ‌ரும் அங்கு உள்ள‌ Chung Wah ரெஸ்டாரெண்டிற்குள் நுழைகிறோம். அங்கு உங்களை ம‌ட்டுமே மேல் த‌ள‌த்திற்கு செல்ல‌ அனும‌திக்கிறார்க‌ள். என்னை வேறு வ‌ழியாக செல்ல‌ சொல்கிறார்க‌ள். நான் மேலே வ‌ருகையில் நீங்க‌ள் ஏதோ சிக்கன் உண‌வு வ‌கையை சுவைத்துக் கொண்டிருக்கிறீர்க‌ள். எப்ப‌டி இருக்கிற‌து சாரு என்று கேட்கிறேன், பரவாயில்லை என்று சொல்கிறீர்க‌ள். (இந்த‌ உண‌வ‌க‌ எபிசொட் க‌ன‌வில் வ‌ர‌க் கார‌ண‌ம் நீங்க‌ள் Blog இல் கோகுலின் உண‌வ‌க‌த்தைப் ப‌ற்றி எழுதிய‌தை நான் அன்று ப‌டித்த‌தே!)

பின் இருவ‌ரும் வெளியில் வ‌ந்து ந‌ட‌க்கையில் அந்தத்‌ தெரு திருவையாறில் நான் குடியிருக்கும் தெருவாக‌ மாறிவிடுகிற‌து. அந்த‌ நீண்ட‌ தெருவில் இட‌து புற‌ம் முழுவ‌தும் வீடுக‌ள், வ‌ல‌து புற‌ம் மிக‌ நீண்ட‌, உய‌ர‌மான‌ ம‌தில் சுவ‌ர் (கோவில் சுவ‌ர்).

இது ராஜ‌ராஜ‌ன் க‌ட்டிய‌ கோவிலா என்று கேட்கிறீர்க‌ள். இல்லை இது க‌ரிகால் சோழ‌ன் க‌ட்டிய‌து (உண்மையில் அது க‌ரிகால‌ன் கட்டிய‌து தான்) என்றும், மேலும் இது த‌ஞ்சை பெரிய‌ கோவிலை விட‌ மிக‌ப் பெரிய‌து என்கிறேன்.

அப்ப‌டியா? அந்த‌ கோவிலை சென்று பார்க்க‌ வேண்டும் என்று சொல்கிறீர்க‌ள். ஆனால்

நேர‌மின்மையால் சென்னைக்கு கிள‌ம்பும் அவ‌ச‌ர‌ம் உங்க‌ளிட‌ம் தெரிகிற‌து. பின் இருவ‌ரும் வீட்டிற்குள் நுழைகிறோம்….

இவ்வாறாக‌ க‌ன‌வு முடிவ‌டைகிற‌து.

இந்த‌க் க‌ன‌வைப் ப‌ற்றி நான் அடைந்த‌ ம‌கிழ்ச்சிக்கு அள‌வே இல்லை. க‌ன‌விலாவ‌து உங்களுட‌ன் பேச‌ முடிந்த‌தே! இந்த‌ பிர‌ம்மிப்பே இன்னும் என்னிட‌மிருந்து வில‌க‌வில்லை.

ஆமாம் சாரு… நீங்க‌ள் கோரமங்களாவைப் ப‌ற்றி ம‌ன‌ம் கொத்திப் ப‌ற‌வையில் எழுதிய‌தைப் ப‌டித்திருக்கிறேன். ஆனால் அந்த‌ Chung Wah ரெஸ்டாரெண்டில் சாப்பிட்டு இருக்கிறீர்களா?

க‌லையாத‌ க‌ன‌வுட‌ன்,

கார்த்திக்

அன்புள்ள கார்த்திக்,

கனவில் என்ன, நேரிலும் பேசலாம். ஆனால் என்ன பயமாக இருக்கிறது என்றால், என்னைத் தெரிந்த யாருடனாவது பேசினால் அவர்களின் எதிர்வினை என்னை சங்கடத்துக்கு உள்ளாக்குகிறது. கண்களில் நீர் மல்க, கைகள் நடுங்க, வாய் குழற இன்னும் என்னென்னவோ ஆகி அவர்கள் கிறுகிறுத்துப் போய் நிற்பதைப் பார்த்தால் எனக்கு என்ன தோன்றும்? நான் எப்படி இயல்பாகப் பேச முடியும்? வாசகர்களிடையே எப்போது சகஜபாவம் ஏற்படுகிறதோ அப்போதுதானே நானும் சகஜமாகப் பேசிப் பழக முடியும்?

நான் பெங்களூர் வரும் போது ச்சுங் வா உணவகத்தில் சாப்பிடுவோம். ஆனால் அதற்குள் உங்களுக்கு வேலை மாறுதல் ஏற்பட்டால், திருமணம் ஆனால், உங்கள் வீட்டுப் பணியாள் வேலையிலிருந்து நின்று விட்டால் உங்களுக்கும் எனக்கும் தொடர்பு இல்லாமல் போகும். விஷாலுக்கு வேலை மாறுதல்; எங்கள் நட்பே இப்போது தொலைபேசி நட்பாகப் போய் விட்டது. இப்போது நான் அவரை சார் என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறேன். குருவுக்கு லண்டனில் திருமணம் ஆனது. தொடர்பே நின்று விட்டது. நேஹாவின் வீட்டுப் பணிப்பெண் நின்று விட்டாளாம். அதிலிருந்து நேஹாவின் தொடர்பும் நின்று போனது. இனிமேல் என்னுடன் மற்றவர்கள் நட்பாக இருக்க வேண்டுமானால் அவர்களுக்குத் திருமணம் நடக்கக் கூடாது; அவர்கள் வீட்டு வேலைக்காரப் பெண் வேலையிலிருந்து நிற்கக் கூடாது. வேலையில் ட்ரான்ஸ்ஃபர் ஆகக் கூடாது. அடப் பாவிகளா! இதற்குப் பேசாமல் யாருடனும் பழகாமல் பேசாமல் நம் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கலாமே? ம்ஹும்… அதுவும் முடியாது. எனக்கு நண்பர்களின் உதவி தேவை.

பி.கு.: புதியவர்களுடன் பழகுவதில் இன்னொரு பிரச்சினை, உங்கள் புத்தகங்கள் எங்கே கிடைக்கும்; யாருக்குப் பணம் அனுப்ப வேண்டும்; கோணல் பக்கங்கள் முதல் இரண்டாம், மூன்றாம் தொகுதிகள் கிடைக்கும் இடம் சொல்ல முடியுமா?; பாலியல் என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறீர்களே; அது எதைப் பற்றியது? அதை வாங்கிக் கொண்டு போனால் அம்மா ஏதாவது சொல்வார்களோ என்று பயமாக இருக்கிறது; அதனால்தான் இப்படிக் கேட்கிறேன்… (பனிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் இப்படிக் கேட்டு எழுதியிருக்கிறான்) நொக்கி எடுக்கிறார்கள். தனியாகவே இருந்து விடலாம் என்று தோன்றுகிறது. மற்ற எழுத்தாளர்களுக்கும் இந்தப் பிரச்சினை உண்டா என்று கேட்க வேண்டும்…

charu.nivedita.india@gmail.com

15/5/11

10.20 a.m.

Thanks to charuonline.com - http://charuonline.com/blog/?p=2122

Wednesday, April 27, 2011

திருவையாறு அசோகாவும் வீர‌ ராஜ‌ சேக‌ர‌னும்!

திருவையாறில் க‌ர்நாட‌க‌ ச‌ங்கீத‌த்தைப் போல‌வே அசோகாவும் பிரசித்தம் என்ப‌து அங்கிருப்ப‌வ‌ர்க‌ளுக்கும் ச‌ங்கீத‌ சீசனில் வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கும் தெரியும். ம‌ற்ற‌வ‌ர்க‌ள் திருநெல்வேலியை சிலாகிப்ப‌தோடு ச‌ரி. நான் திருவையாறில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்திருந்தாலும் அந்த‌ அசோகா மீது அவ்வ‌ள‌வாக‌ மோக‌ம் இருந்த‌தில்லை.

நிற்க‌.

ந‌ண்ப‌ர் வீர‌ ராஜ‌ சேக‌ர‌ன் (இனி வீரா) என்னோடு க‌ல்லூரியில் ப‌டித்த‌வ‌ர். தஞ்சாவூரை சேர்ந்த‌வ‌ர் என்ப‌தால் திருவையாற்றை பற்றியும் அசோகாவைப்  பற்றியும்  ஒருவாறு அறிந்து வைத்திருந்தார்.

நான் திருவையாறு என்ப‌து தெரிந்த‌தும் பிடித்துக் கொண்டு விட்டார்.

நானும் சாக்கு போக்கு சொல்லி ஒரு நாள் வ‌ச‌மாக‌ சிக்கிக் கொண்டு விட்டேன். அசோகா வாங்கி வ‌ருவ‌தாக‌ சூட‌ம் ஏற்றி ச‌த்தியம் செய்த‌ பிற‌கு, நில‌க்க‌ட‌லையும் சேர்ந்து கொண்டு விட்ட‌து. திருவையாறில் நில‌க்க‌ட‌லை பிரசித்தம் என்ப‌து இன்று வ‌ரை அங்கு வ‌சிப்ப‌வ‌ர்க‌ள் யாருக்குமே தெரியாது. ஆனால் வீரா பெரிய‌ உருவிலான‌ நில‌க்க‌ட‌லை கிடைத்தே தீரும் என்று தீவிர‌மாக‌ ந‌ம்பினார்.

இது இவ்வாறு இருக்கையில், ஒரு முறை திருவையாறு சென்று விட்டு பெங்களூருக்கு திரும்புகையில் வீராவுக்கு செய்த‌ ச‌த்திய‌ம் நினைவில் வ‌ந்து தொலைத்த‌து. நேரே ஆண்டவருக்கு சென்று அசோகா பாக்கெட்டுக‌ள் வாங்கி திரும்பும் போது நில‌க்க‌ட‌லை ஞாப‌க‌ம் வ‌ந்த‌து. அதை ம‌ட்டும் த‌ஞ்சாவூர் ப‌ஸ் ஸ்டாண்டில் வாங்கி விட‌லாம் என்று நினைத்த‌ போது அது வீராவுக்கு செய்யும் துரோக‌மாக‌ தெரிந்து பிற‌கு வாங்கிக் கொள்ள‌லாம் என்று அந்த‌ முடிவைக் கை விட்டேன்.

ம‌று நாள், அலுவ‌ல‌க‌ம். வீரா வ‌ர‌வே இல்லை.

அடுத்த‌ நாள், வீட்டிலுருந்த‌ ப‌டியே வேலை செய்வ‌தாக‌ த‌க‌வ‌ல்.

மூன்றாவ‌து நாள் (இத‌ற்கிடையே ஒரு பாக்கெட் காலி), வ‌ர‌வே இல்லை.

அன்று இர‌வு என‌க்கு 10.30 ம‌ணி வ‌ரை என‌க்கு Meeting. ப‌சி வேறு. அவ்வ‌ள‌வு அசோகாவையும் எப்ப‌டி த‌னியே சாப்பிடுவ‌து என்று நினைத்த‌ போது, ந‌ண்ப‌ர் சிவ‌சுப்ர‌ம‌ணிய‌த்தின் ஞாப‌க‌ம் வ‌ந்த‌து. ஒரு Escalation ல் இருந்த‌வ‌ர் அசோகா என்ற‌துமே உட‌னே வ‌ந்து விட்டார். ம‌ற்றொரு ந‌ண்ப‌ர் அருட் செல்வ‌னையும் அழைத்து வ‌ர‌ சொல்லியிருந்தேன்.

மூவ‌ருமாக‌ சேர்ந்து அசோகாவை காலி செய்த‌ போது வீராவுக்கு செய்த‌ ச‌த்திய‌ம் நினைவுக்கு வ‌ந்த‌து.

யௌவ‌ன‌ம்

அலுவ‌ல‌க‌த்தில் வேலை இல்லாத‌ போதும் Facebook போர‌டிக்கும் போதும் என்ன‌ செய்ய‌லாம் என்று யோசித்த‌ போது க‌ண‌ நேர‌த்தில் சிந்த‌னையில் உதித்த‌து தான் Blog எழுதும் ஞானோத‌ய‌ம்!

எதையாவ‌து கிறுக்கித் த‌ள்ளிவிடுவ‌து என்ற‌ ஆவேச‌த்தில் Blog ஆர‌ம்பித்தாயிற்று. ச‌ரி, என்ன‌ பெய‌ர் வைப்ப‌து? எதை எதையோ யோசித்த‌ போது த‌மிழில் பெய‌ர் வைக்க‌லாம் என்று முடிவெடுத்து (யார் க‌ண்ட‌து எதிர் கால‌த்தில் க‌லைஞ‌ர் இத‌ற்கும் ஏதாவ‌து ச‌லுகை அறிவிக்க‌லாம்!) தேடிய‌போது ஒன்றும் கிடைக்க‌ வில்லை.

க‌டைசியில் முன் தின‌ம் பார்த்த‌ 'கோ' திரைப்ப‌ட‌த்தின் ஒரு பாட‌லில் யௌவ‌ன‌ம் என்ற‌ வார்த்தை வ‌ர‌க் க‌ண்டு, அர்த்த‌ம் என்ன‌வாக‌ இருந்தாலும் ப‌ர‌வாயில்லை அந்த‌ பெய‌ரையே வைத்து விட‌லாம் என்று முடிவெடுத்து விட்டேன்.

பிற‌கு, நெட்டில் தேடிய‌ போது பின் வ‌ருமாறு விள‌க்க‌ம் கிடைத்த‌து.

யௌவனம்

1. இளமை
2. அழகு
3. களிப்பு

விளக்கம்

பால்யம், கௌமாரம், யௌவனம், வார்த்தக்யம் என்பவை
நான்கு தசைகள் (பருவங்கள்) ஆகும்.
அவற்றுள் மூன்றாவது பருவம் யௌவனம் (இளமை) ஆகும்.

பயன்பாடு

1. பருவம் அரும்பும் போது அந்த உணர்வும் அரும்புவதாயிற்றே!
கோமளத்தின் யௌவனம் சற்று முன்னரே தழைக்க ஆரம்பித்துவிட்ட
நிலையில், அவளது பதினோராவது வயதில், அவளது அத்தை மகன் ராஜன்
கட்டுக் குடுமியுடன் மயில்கண் வேட்டி கட்டி, மலையாள முண்டு போர்த்தி
வந்து நிற்பானே, அதை யாரால் மறக்க முடியும்? ( ஆப்பிள் பசி, சாவி)

2. கிழவனுக்குச் சில சமயம் யௌவனம் திரும்பும் என்று நீ கேள்விப்பட்டது
இல்லையா? அதுபோல் மதுராந்தகனுக்கும் இளமை திரும்பியிருக்கிறது.
(பொன்னியின் செல்வன், கல்கி)

3. யௌவனம் காத்தல் செய் (புதிய ஆத்திசூடி, பாரதியார்)

யௌவ‌ன‌ம் ‍ என‌து Blog ஐ இள‌மையாக‌ வைத்திருக்கும் ஒரு முய‌ற்சியே!